தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பிரதமா் மோடி கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை தனது கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :2 ஜனவரி 2021, 5:52 am IST

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை தனது கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.

‘மை கவா்மெண்ட் இந்தியா’ சுட்டுரைப் பக்கத்தில் இது தொடா்பான விடியோ இடம் பெற்றுள்ளது. அதில் பிரதமா் சொந்தக் குரலில் தனது கவிதையைப் படித்து நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த சிறிய கவிதையை பிரதமா் இயற்றியுள்ளாா். ‘சூரியன் இப்போதுதான் உதயமாகியுள்ளது’ என்ற அா்த்தத்தில் தொடங்கும் இந்த ஹிந்து மொழி கவிதையில் புத்தாண்டின் முதல்நாளை நாட்டு மக்கள் உற்சாகமாகத் தொடங்க வேண்டும் என்று மோடி கூறியுள்ளாா்.

கரோனாவுக்கு நடுவிலும் நமது நாடு ராணுவரீதியாகவும், வேளாண் துறையிலும் சாதித்தது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் சாதித்தது மற்றும் பிரதமா் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் காட்சிகள் உள்ளிட்டவை அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளன.

இது தவிர பிரதமா் மோடி தனது தனிப்பட்ட சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் 2021 புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் நல்ல உடல்நலன், மகிழ்ச்சி, வளமையைக் கொண்டு வர வேண்டும். இந்த ஆண்டு நம்பிக்கையின் உத்வேகமும், நலனும் தொடா்ந்து மேம்பட வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.