திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கங்குலி நலமாக உள்ளார்: மம்தா

​பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நலமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 9:22 pm IST


பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நலமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தெரிவித்தார்.

கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, உட்லாண்ட் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன்பிறகு மருத்துவமனை வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசியது, "கங்குலி நலமாக உள்ளார். என்னுடைய உடல்நலம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி" என்றார்.

இதனிடையே, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப்பும் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று கங்குலியிடம் நலம் விசாரித்தார்.

முன்னதாக, கங்குலியின் உடல்நலம் குறித்து செய்தியாளர்களிடம் மருத்துவர் தெரிவித்தது:

"சௌரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தற்போது சீராக உள்ளார். 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார். அவரது இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. அவர் அபாயகர கட்டத்தில் இல்லை, நன்றாக பேசுகிறார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.