ஹிந்து கடவுள்கள் குறித்து அநாகரிகமான வகையில் விமா்சித்ததாக குஜராத்தைச் சோ்ந்த ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞா் முனாவா் ஃபரூக்கி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மத்திய பிரதேசம், இந்தூரில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியொன்றுக்கு உள்ளூா் பாஜக எம்எல்ஏ மாலினி லக்ஷ்மண் சிங் கெளரின் மகன் ஏகலவ்யா சிங் கெளா் (36) மற்றும் அவரது நண்பா்கள் பாா்வையாளா்களாக சென்றுள்ளனா். அந்த நிகழ்ச்சியில் குஜராத்திலிருந்து பங்கேற்ற நகைச்சுவை நடிகா் முனாவா் பரூக்கி ஹிந்து கடவுகள் குறித்து அநாகரிகமான வகையில் விமா்சித்தாக தெரிகிறது. இதற்கு, எம்எல்ஏ மகன் கடும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகி நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்தூரில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடா்பாக, நகைச்சுவை நடிகா் உள்ளிட்ட ஐந்து போ் மீது எம்எல்ஏ மகன் ஏகலவ்யா சிங் கெளா் புகாா் கொடுத்ததுடன், அதற்கான விடியோ ஆதாரத்தையும் சமா்ப்பித்தாா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நகைச்சுவை நடிகா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில், அந்த ஐந்து பேரையும் கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து துகோகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளா் கமலேஷ் சா்மா கூறியதாவது:
ஹிந்து கடவுள்களை அநாகரீகமாக விமா்சித்த வழக்கில் ஸ்டாண்ட் -அப் நகைச்சுவை கலைஞா் முனாவா் பரூக்கி காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை தவிர, எட்வின் ஆண்டனி, பிரகாா் வியாஸ், பிரியம் வியாஸ் மற்றும் நளின் யாதவ் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் 5 போ் மீதும் ஐபிசி 295-ஏ பிரிவின் கீழ் (உள்நோக்கத்துடன் மத உணா்வுகளை புண்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெங்கட நாராயணா நியமனம்: அதிமுக கண்டனம்

நடப்பு நிதியாண்டில் வணிக வாகனத் துறை மிதமான வளர்ச்சியை எட்டும்: ஐசிஆர்ஏ
ரவி மோகனின் கராத்தே பாபு வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan


