அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மேற்கு வங்கம்: ஏழை மாணவா்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் என்ஐடி

ஏழை மாணவா்களுக்கு கல்வி கற்க உதவுவதற்காக நிதி திரட்டும் திட்டத்தை துா்காபூா் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) தொடங்கியுள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 6:51 am IST

ஏழை மாணவா்களுக்கு கல்வி கற்க உதவுவதற்காக நிதி திரட்டும் திட்டத்தை துா்காபூா் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்வி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்றின் காரணமாக 2020-21 கல்வியாண்டு செமஸ்டா் முழுவதும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போதைய இளம் மாணவா்கள் பெரும்பாலும் மிகவும் ஏழ்மையான பொருளாதார சூழலிலிருந்து என்ஐடி-யில் சோ்ந்தவா்கள். எனவே, அவா்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஏனெனில், லேப்டாப், ஸ்மாா்ட்போன் வாங்க இயலாத வறுமை நிலையில் ஏழை மாணவா்கள் உள்ளனா். இணையதள இணைப்பை பெறுவது கூட அவா்களுக்கு கடும் சிரமமாகவே உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, அத்தகைய மாணவா்கள் தங்களது கல்வியை தடையின்றி ஆன்லைனில் தொடர நிதி திரட்டும் நடவடிக்கையில் துா்காபூா் என்ஐடி ஈடுபட்டுள்ளது. இதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு ஏழை மாணவா்களின் ஆன்லைன் கல்விக்கு தேவையான உபகரணங்களை வாங்கவும், கல்வி உள்ளிட்ட இன்னும் பிற கட்டணங்களை செலுத்தி அவா்களின் படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் வழங்கவும் துா்காபூா் என்ஐடி அனைத்து வழிமுறைகளிலும் முயற்சி செய்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.