அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தில்லியில் மழை: போராட்டத்தில் சிரமத்தை சந்திக்கும் விவசாயிகள்

தில்லியில் தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

News image

தில்லியில் மழை: போராட்டத்தில் சிரமத்தை சந்திக்கும் விவசாயிகள்

Updated On :3 ஜனவரி 2021, 2:27 pm IST

தில்லியில் தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஜன. 2) முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சாலைகளில் கூடாரம் அமைத்து போராடி வரும் நிலையில், மழையால் விவசாயிகள் சாலைகளில் அமைத்த கூடாரம் நனைந்தது. போர்வை, மாற்று உடைகள் என அனைத்தும் நனைந்ததால், குளிரில் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமைப்பதற்கு தேவையான விறகுகள் நனைந்ததாலும், உணவுப் பொருள்களும் பெரும்பாலும் நனைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Story image

மழைநீரில் நனையாத கூடாரங்கள் அமைத்திருந்தாலும், மழை நீர் தேங்குவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story image

இது குறித்து பேசிய சங்கியூட் கிஷான் மோர்ச்சா விவசாய சங்கத் தலைவர் அபிமன்யூ கோஹர், ''மழை நீர் தேங்குவதாலும், குளிராலும் இரவில் தங்குவதற்கு விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

மழையாலும், தேங்கி நிற்கின்ற தண்ணீராலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நிலை மோசமடைந்துள்ளது.

Story image

இத்தனை துயரத்திற்கு மத்தியில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் துயரங்களை அரசு கவனிக்கத் தவறுகிறது'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.