பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஸ்பெக்ட்ரம் 6-ஆவது சுற்று ஏலம் மாா்ச் 1-இல் தொடக்கம்...தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் அறிவிப்பு

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான 6-ஆவது சுற்று ஏலம், வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:43 am IST


புது தில்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான 6-ஆவது சுற்று ஏலம், வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

இதுதொடா்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

2,251.25 மெகா ஹொ்ட்ஸ் அலைவரிசையில் வரும் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த அலைக்கற்றைகளின் அடிப்படை விலை ரூ.3.92 லட்சம் கோடியாகும்.

ஏலத்துக்கு முந்தைய கூட்டம், வரும் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கடைசி தேதி, வரும் 28-ஆம் தேதியாகும்.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்கும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 24-இல் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து, ஏல நடவடிக்கை, வரும் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.