ஜம்மு-காஷ்மீரில் மருத்துவமனையிலிருந்து மகப்பேறு முடிந்த தாயையும், பச்சிளம் குழந்தையையும் 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவத்தினர் சுமந்து வந்து அவர்களது வீட்டில் சேர்த்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ராணுவத்தினர் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப் பொழிவால் சாலைகளில் பனிப்படர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடர் பனியால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பசல்போரா மருத்துவமனையில் மகப்பேறு முடிந்த தாய்- சேய் வீடு திரும்ப சோபோரா பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் உதவியுள்ளனர்.
பசல்போரா பகுதியிலிருந்து துனிவார் பகுதி வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தாயையும், சேயையும் படுக்கையில் வைத்து ராணுவ வீரர்கள் சுமந்து வந்துள்ளனர். ராணுவ வீரர்களுடன் செவிலியரும் உதவிபுரிந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்ப்பிணிப் பெண்ணை ராணுவ வீரர்கள் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

விருச்சிக ராசிக்கு உற்சாகம்: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 10 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு தைரியம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

