வெள்ளிக்கிழமை தொடங்கிய கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார்.
அப்போது ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. கேரளத்தில் நடப்பாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடதுமுன்னணி அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றன.
கேரளத் தங்கக் கடத்தல் வழக்கு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “இது ஊழல் மிகுந்த அரசு” எனக் குற்றம்சாட்டினார்.
ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










