உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்குச் சென்ற மகளிர் ஆணையத் தலைவர் தெரிவித்த கருத்து சர்ச்சையக் கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் படான் நகரில் 50 வயதான பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த வழக்கில் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான சந்திரமுகி தேவி விசாரணைக்காக வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றார். விசாரணையின் முடிவில் வழக்கு விசாரணையில் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த சந்திரமுகி கொலை செய்யப்பட்ட பெண் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியது.
“கொலை செய்யப்பட்ட பெண் மாலை நேரத்தில் வெளியில் செல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது உடன் குடும்ப உறுப்பினர்கள் யாராவது சென்றிருந்தாலோ இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்” என சந்திரமுகி தேவி தெரிவித்தார்.
மேலும் அந்தப் பெண் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றிருந்தால், உயிர் பிழைத்திருக்கலாம் என்று தெரிவித்த சந்திரமுகி தேவி ஆனால் அவருக்கு அத்தகைய வசதி கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

விருச்சிக ராசிக்கு உற்சாகம்: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 10 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு தைரியம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

