தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை: அரசு உறுதி

திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை என்று அம்மாநில விலங்குகள் நல வாரியம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

News image

திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை: அரசு உறுதி

Updated On :9 ஜனவரி 2021, 4:17 pm IST

திரிபுராவில் பறவைக் காய்ச்சல் இல்லை என்று அம்மாநில விலங்குகள் நல வாரியம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

பிசல்கார் மற்றும் உதய்பூர் பகுதியில் கோழி இறந்ததைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பரவிய புரளியைத் தொடர்ந்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திரிபுராவில் இது தொடர்பாக பேசிய சமூக நலம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டு அமைச்சர் சந்தனா சக்மா, பாக்டீரியா தொற்று காரணமாக கோழி இறந்ததாகக் கூறினார்.

பிசல்கார் மற்றும் உதய்பூர் பகுதிகளில் கோழி இறந்ததால் மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

கோழிகளில் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் கோழி பாக்டீரியாவால் இறந்ததாக தெரியவந்துள்ளது.

பறவைக் காய்ச்சல் எதிரொலியால் அசாம் - திரிபுரா எல்லைகளில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திலுள்ள பண்ணைகளையும் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.