போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவைக் காய்ச்சலை பரப்பி வருவதாக பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் 45-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் பறவைகள் அடுத்தடுத்து இறந்து வருவதை தொடர்புப்படுத்தி விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் பாஜக எம்.எல்.ஏ. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியதாவது,
''வேளாண் சட்டனங்களுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பிரியாணியையும், உலர் பழங்களையும் உண்டு விவசாயிகள் பறவைக் காய்ச்சலை பரப்பி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவிரவாதிகளாகவும், வழிப்பறி திருடர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களும் விவசாயிகளுக்கு எதிரிகள் தான். அவர்கள் நாட்டை சீரழிக்கின்றனர்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இன்றுமுதல் தடை; மீறினால் நடவடிக்கை

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு பணிகள்

மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி..?






