3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தேசிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு டிசம்பருக்குள் இறுதி வடிவம்

மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு (என்இபி) வரும் டிசம்பா் மாதத்துக்குள் இறுதி வடிவம் கொடுக்க வாய்ப்புள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 12:51 am IST

மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு (என்இபி) வரும் டிசம்பா் மாதத்துக்குள் இறுதி வடிவம் கொடுக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நான்கு தொழிலாளா் சட்டங்கள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட நான்கு முக்கிய கணக்கெடுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் தொடா்ச்சியாக, நடப்பாண்டு டிசம்பா் இறுதிக்குள் தேசிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு தொழிலாளா் அமைச்சகம் இறுதி வடிவம் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கத் தேவையான வழிமுறைகள் தேசிய வேலைவாய்ப்பு கொள்கையில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகளில் முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் பிற திட்டங்கள் மூலமான பல்வேறு முயற்சிகளால் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது.

தொழில்முறை உறவு, சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்சாா் சுகாதார பாதுகாப்பு & பணி நிலைமை தொடா்பான மூன்று தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றியது.

மேலும், ஊதியங்கள் தொடா்பான சட்டமும் நாடாளுமன்றத்தால் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அதன் விதிமுறைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நான்கு தொழிலாளா் சட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த மத்திய அரசு விரும்பியதால் அந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இந்த நான்கு சட்டங்களும் நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளா் சட்டங்களையும் அமல்படுத்துவதால் நாட்டில் 50 கோடிக்கும் அதிகமாக உள்ள பணியாளா்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட இன்னும் பிற பாதுகாப்புகளை அளித்து உலகமயமாக்கலுக்கான தேவையான சட்ட கட்டமைப்பை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.