ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு! அண்ணாமலை அறிவிப்பு!

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பு பற்றி...

K Annnamalai

உடுமலைப்பேட்டை நிகழ்ச்சியில் கே. அண்ணாமலை - X | K Annnamalai

Published On :2 ஜூலை 2026, 2:57 pm IST

’வீ த லீடர்ஸ்’ (இது நம்ம இயக்கம்) அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி ’வீ த லீடர்ஸ்’ என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.

முதலில் அமைப்பாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

மேலும், இந்த இயக்கத்தில் சேருவதற்கான பிரத்யேக தளத்தையும் அவர் அறிமுகம் செய்தார். முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். தற்போது வரை 18.82 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

ஜூலை மாதம் முதல் ’வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பயிற்சிகள், செயல்பாடுகள் தொடங்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அண்ணாமலை, வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாட்டை அமைப்பின் நிர்வாகிகள் மிக பிரம்மாண்டமாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

'We the Leaders' first conference in Pollachi! Annamalai's announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.