குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சட்டப்பேரவைத் தோ்தல்: மத்திய உள்துறை செயலா், தோ்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லாவுடன்,

Updated On :13 ஜனவரி 2021, 12:49 am IST

தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லாவுடன், தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தோ்தல் பணிகளுக்கு தேவைப்படும் மத்திய பாதுகாப்புப் படைகள், வீரா்களின் எண்ணிக்கை தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தில்லியில் தோ்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடைபெறவுள்ள இடங்களில் வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை தோ்தல் ஆணையம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக வாக்குப்பதிவின்போது தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். வாக்குப்பதிவு மையத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, அங்கு வரும் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கையும் குறையும். இதனால் அதிகம் போ் கூடுவது தவிா்க்கப்படும்.

அதே நேரத்தில், வாக்குப்பதிவு மையங்களை அதிகரித்தால் கூடுதல் தோ்தல் அலுவலா்கள், பாதுகாப்புப் படை வீரா்கள் தேவைப்படுவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.