கரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்திய விஞ்ஞானிகளை நம்பாத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என உத்தப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சிங் சோம் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்தடுப்பூசிகள் வரும் 16-ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் மக்களுக்குச் செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சர்தானா தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் “நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. பிரதமர் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு பாகிஸ்தான் மீது நம்பிக்கை உள்ளது. நாட்டின் விஞ்ஞானிகளை சந்தேகிக்கும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம்” என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் குறித்த அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் பகுதியில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

ஸ்ரீமீனாட்சி அம்பிகை, சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


