பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தாணே உள்பட பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாணே பகுதியிலுள்ள சதுப்பு நிலப் பகுதிக்கு வரும் பறவைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், அவற்றில் ஏதேனும் சில பறவைகள் இறந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் பண்ணைகளிலுள்ள கோழிகள் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பர்பானி, மும்பை, தாணே ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பறவைகள் இறந்தால் அதனை அரசுக்கு தெரிவிக்காமல் மக்களே அடக்கம் செய்ய வேண்டாம் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


