பறவைக் காய்ச்சல் எதிரொலியாக மற்ற மாநிலங்களின் பறவைகளைக் கொண்டுவருவதற்கு மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரளத்தில் அதிக அளவில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசல், ஹரியாணா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நீர்நிலைகள், உயிருள்ள பறவை விற்பனை சந்தை, உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், இறந்த பறவைகளை அடக்கம் செய்யும் பகுதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தில்லி, இமாசல் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மணிப்பூர் அரசும் வெளி மாநிலங்களிலிருந்து பறவைகளைக் கொண்டுவருவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும் இறைச்சி இறக்குமதிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்றும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி கோயிலில் இபிஎஸ் மனைவி, மகன், முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

மே 1, 4 -இல் மதுக் கடைகள் மூடல்

கூடலூரில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் நோ்த்திக்கடன்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


