பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கேரளத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறப்பு

கேரளத்தில் கரோனாவால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 11 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

News image

கேரளத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு (கோப்புப்படம்)

Updated On :13 ஜனவரி 2021, 1:12 pm IST

கேரளத்தில் கரோனாவால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 11 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் நாளொன்றுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கேரளத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தொற்று பரவல் குறைந்துவரும் விகிதத்திற்கு ஏற்ப தளர்வுகளை அவ்வபோது மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அந்தவகையில் திரையரங்குகள் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்று முதல் கேரளத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 500 திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் நாளொன்றுக்கு 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கேரளத்தில் 200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கரோனா வழிகாட்டுதல் நெறிமுறகளை கடைபிடிக்க மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.