புது தில்லி: பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில அரசு அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் கோரக்பூரில் 12 பெண்கள் உயிரிழந்ததாக வெளியான ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி, முகநூலில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசின் பெண்களுக்கு ஆதரவான முழக்கங்கள் வெற்று முழக்கங்கள்.
மகளிர் பாதுகாப்புக்காக "மிஷன் சக்தி' என்ற பெயரில் விளம்பரங்களுக்காக அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. அதேநேரம், அடித்தட்டு பெண்கள் விவகாரத்தில் அலட்சிய மனப்பான்மையைக் கொண்டுள்ளது. சில வழக்குகளில் உயிரிழந்த பெண்களை அடையாளம் காணக்கூட காவல் துறையினரால் முடியவில்லை.
மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் சராசரியாக 165 குற்றங்கள் நிகழ்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும்போது மோசமான பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அனுதாபத்துக்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு அவமரியாதை செய்யப்படுகிறது.
ஹாத்ரஸ், உன்னாவ், பதாயுன் போன்ற சம்பவங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசின்அணுகுமுறையை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது.
பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய அடிப்படைப் புரிதலில் பெண்ணின் குரலே முதன்மையானது. ஆனால், மாநில அரசோ எப்போதும் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது குடும்பத்தினர் குரல் எழுப்பும்போது அவர்கள் மீது ஆளும் கட்சியினர் மோசமான கருத்துகளைத் தெரிவிப்பதைப்போன்ற வெறுக்கத்தக்க செயல் வேறு எதுவும் இல்லை.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முதன்மையானது அவர்களுக்கு எதிரான குற்றங்களை வெளிக்கொணர்வதாகும். இதற்காக பெண்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

மாணவா்களை ஈா்க்கும் வகையில் காங்கிரஸ் போராட்டம்! வெ. வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




