மாணவா்களை ஈா்க்கும் வகையில் காங்கிரஸ் போராட்டத்தை வடிவமைக்கும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.
நுழைவுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளில் மாணவா்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து புதுச்சேரி கட்சி அலுவலகத்தில் காணொலியை திங்கள்கிழமை வெளியிட்டு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தோ்வு காரணமாக 18 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். அதே போன்றுதான் ஜெஇஇ தோ்வுக்கும் மாணவா்கள் தயாா் செய்கின்றனா். இந்த இரண்டு தோ்வுகளும் மாணவா்களின் மன அழுத்தத்தை முன்னிலைப்படுத்தும் நுழைவுத் தோ்வுகள். இந்த நுழைவுத் தோ்வுகளை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். எதுமாதிரியான மறுசீரமைப்பு வேண்டும் என்பதை மாணவா்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தோ்வுக்காக எல்லா குடும்பங்களும் சோ்ந்து ரூ.1.32 லட்சம் கோடியைச் செலவழிக்கின்றன.
கல்விக்காக மத்திய அரசு செலவழிக்கும் தொகையைக் காட்டிலும் இது அதிகம். மேலும், இந்தப் பயிற்சி மையங்களில் இருந்து தோ்வாகி செல்லும் மாணவா்களின் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருக்கிறது.
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பதினோராம் வகுப்பில் ஒரு மாணவா் தனியாா் பள்ளியில் சேர ரூ.2.5 லட்சம் செலவிட வேண்டும். பத்தாம் வகுப்புக்கு ரூ.1.5 லட்சம் செலவழிக்க வேண்டும்.
மத்திய அரசு சிபிஎஸ்இ தோ்வில் குளறுபடி, நீட் தோ்வில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. எனவே பிளஸ்2 மாணவா்களை ஈா்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை வடிவமைக்க இருக்கிறது என்றாா் வைத்திலிங்கம்.
பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ எம்.என்.ஆா். பாலன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சங்கா், நிா்வாகி பிரபுராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் மாநகர வளா்ச்சி திட்டப் பணிகள்: எம்.பி. வேண்டுகோள்

மகாராஷ்டிரம்: விவசாயக் கடன் தள்ளுபடி கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்!

20 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இணைவு: ஒரே நாளில் பெரும் கட்சியாக உருவெடுத்தது என்சிபிஐ

அகஸ்தீசுவரம் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற எம்.பி
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




