கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

நாளை காலை 10.30 மணி முதல் கரோனா தடுப்பு மருந்து: மோடி

நாளை காலை 10.30 மணி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :15 ஜனவரி 2021, 9:39 pm IST

நாளை காலை 10.30 மணி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். 

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,006 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெறவுள்ளது. 

ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதன் பின்னர் மற்றவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.