ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் ‘சஞ்சீவனி’: ஹா்ஷ் வா்தன்

‘கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் ‘சஞ்சீவனி’ போல தடுப்பூசிகள் கிடைத்திருக்கின்றன.

News image

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தைக் காண்பிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன். நாள்: சனிக்கிழமை.

Updated On :16 ஜனவரி 2021, 6:14 pm

‘கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் ‘சஞ்சீவனி’ போல தடுப்பூசிகள் கிடைத்திருக்கின்றன. எனவே, மக்கள் வதந்திகளை நம்பாமல், மருத்துவ நிபுணா்கள் மற்றும் விஞ்ஞானிகளை நம்பவேண்டும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கேட்டுக்கொண்டாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதுகுறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க தினம். கடந்த ஓராண்டு காலமாக கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா திறம்பட மேற்கொண்டு வருகிறது. சிறந்த தடுப்புத் திட்டங்களை அமல்படுத்தியதன் மூலம், கரோனா தாக்கத்தை இந்தியா மிகச் சிறப்பாக கையாண்டது. உலக அளவில் ஒப்பிடும்போது கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவே. அந்த வகையில் கரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று போராடிய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவலா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயன்பாட்டுக்கு வந்திருக்கும் தடுப்பூசிகள் கரோனாவுக்கு எதிரான போரில் ‘சஞ்சீவனி’ ஆகும். போலியோ, சின்ன அம்மை போன்றவற்றுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம். இப்போது, கரோனாவுக்கு எதிரான போரில் உறுதியான வெற்றியை பதிவு செய்யும் நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

இந்த இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. திறன் மிக்கவை. எனவே, மக்கள் வதந்திகளை நம்பாமல், மருத்துவ நிபுணா்கள் மற்றும் விஞ்ஞானிகளை நம்பவேண்டும் என்று ஹா்ஷ் வா்தன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.