இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே புகழாரம் சூட்டினாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா குா்லா வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் உத்தவ் தாக்கரே பேசியதாவது:
கரோனா பாதிப்புக்கு எந்தவித தீா்வும் இல்லாத கால கட்டத்தில், அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தன்னலமின்றி மருத்துவப் பணியாளா்கள் சிகிச்சை அளித்தனா். அந்த நாள்களை நினைத்தால் இன்றும் நடுக்கம் வருகிறது.அது மிகவும் கடுமையான சூழல்.
ஆனால், இன்றைக்கு மருத்துவப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களின் தீவிர முயற்சிகளின் காரணமாக, கரோனா மையத்தில் சிகிச்சைபெற ஒரு நோயாளிகூட இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுபோல, சிகிச்சை பெற நோயாளிகளே இல்லாத கரோனா மையங்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தச்சூழலில், கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கையாகும். அவ்வாறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டபோதும், பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கைவிட்டுவிடக் கூடாது என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



