கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.


தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரை பதிவில்,
இன்று எனது குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி தயாரித்ததில் அயராது உழைத்த மருத்துவக்குழுக்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வயது வரம்பில்லாமல் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றார். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றன.
கடந்த மாதம், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பெற்றோருடன் அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...