அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் துணை முதல்வர் மணீஷ் சிசோடி
Updated On :3 ஏப்ரல் 2021, 9:50 am

PTI

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பதிவில், 

இன்று எனது குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி தயாரித்ததில் அயராது உழைத்த மருத்துவக்குழுக்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் வயது வரம்பில்லாமல் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றார். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றன. 

கடந்த மாதம், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பெற்றோருடன் அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.