வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரிப்பு

பெங்களூரு நகர்ப்புறத்தைத் தவிர கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. 

News image
Updated On :7 ஏப்ரல் 2021, 5:53 am

DIN

பெங்களூரு நகர்ப்புறத்தைத் தவிர கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

பெங்களூரு நகர்ப்புறத்தைத் தவிர மேலும் ஐந்து மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. 

குறிப்பிட்ட அந்த மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். பெங்களூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மைசூருவில் இன்னும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மைசூரு, கலாபுராகி, துமகுரு மற்றும் பிதர் ஆகிய பகுதிகளிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. 

தனியார் மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகளில் 20 சதவீதம் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். 

கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை 6,150 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த பாதிப்பு 45,107 ஆக உள்ளதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.