இந்தியா
கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் உள்பட 149 பேர் மீது வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தின்போது கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தின்போது கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முசாபர்நகரில் போட்டியிடும் பீம் ஆர்மி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.