அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒமர் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு நாள்களில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 10:29 am

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு நாள்களில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இதையடுத்து இன்று பிற்பகல் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

இன்று பிற்பகல் எனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை சீராக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், 'கரோனாவிலிருந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில் அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.