புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் இரு வாரங்களுக்கு முன்னர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு பெரிதளவில் மக்கள் பாதிப்படைந்தனர்.
இதனால் நாடு முழுக்க இரு வாரங்களில் இதுவரை 77 பேர் பலியாகி, 137 பேர் காயமடைந்ததாக ஆப்கன் பேரிடர் மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் யூசுஃப் அகமது தெரிவித்தார். இதில், 26 பேர் கடந்த 2 நாள்களில் மட்டும் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் 44 பேர் இந்தப் பேரிடரில் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியில் 32 பேரும், தென்மேற்கு பலோச்சிஸ்தானில் 12 பேரும் பலியாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில் பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 அளவில் பதிவாகியுள்ளது.
ஆப்கனில் கடந்த ஜனவரியில் பெய்த கனமழை மற்றும் கடும் பனியின் காரணமாக 60 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Rain, storms and earthquake kill 133 in Afghanistan and Pakistan in two weeks
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

தாக்குதல்கள் தீர்வாகாது!

பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல்: 4 பேர் காயம்!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


