முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர்.

News image

ஆப்கனில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீடுகள். - AP

Updated On :4 ஏப்ரல் 2026, 6:56 pm IST

புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் இரு வாரங்களுக்கு முன்னர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு பெரிதளவில் மக்கள் பாதிப்படைந்தனர்.

இதனால் நாடு முழுக்க இரு வாரங்களில் இதுவரை 77 பேர் பலியாகி, 137 பேர் காயமடைந்ததாக ஆப்கன் பேரிடர் மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் யூசுஃப் அகமது தெரிவித்தார். இதில், 26 பேர் கடந்த 2 நாள்களில் மட்டும் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் 44 பேர் இந்தப் பேரிடரில் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியில் 32 பேரும், தென்மேற்கு பலோச்சிஸ்தானில் 12 பேரும் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில் பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 அளவில் பதிவாகியுள்ளது.

ஆப்கனில் கடந்த ஜனவரியில் பெய்த கனமழை மற்றும் கடும் பனியின் காரணமாக 60 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Rain, storms and earthquake kill 133 in Afghanistan and Pakistan in two weeks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.