மேற்கு வங்கத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் வாக்குச் சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்களிக்க வந்த வாக்காளர்கள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி 125-இல் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.
சிதல்குச்சி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து, சிறப்பு தேர்தல் அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.