சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கரோனா 2-ம் அலை மே மாதம் உச்சத்தைத் தொடும்: கர்நாடக அமைச்சர்

கரோனா இரண்டாம் அலை மே மாதம் உச்சத்தைத் தொடும் என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :11 ஏப்ரல் 2021, 5:13 pm


கரோனா இரண்டாம் அலை மே மாதம் உச்சத்தைத் தொடும் என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் புதிதாக 10,250 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வல்லுநர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"மாநிலத்தில் கரோனா 2-ம் அலை மே முதல் வாரத்தில் உச்சத்தைத் தொடும். மே இறுதியில் படிப்படியாகக் குறையும். மகாராஷ்டிரம் போன்ற கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அவர்களது அறிவுறுத்தலின்பேரில் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்."

கர்நாடகத்தில் 69,225 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.