மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலில் 2ஆவது அலை வேகமெடுத்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 63,294 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 349 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அங்கு 5,65,587 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியானார்.
இந்த நிலையில் மும்பையில் வகோலா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி கரோனாவுக்கு பலியாகியுள்ளார். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் பிகேசி ஜம்போ கரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மும்பையை பொறுத்தவரையில் இதுவரை 101 காவல்துறையினர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


