கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளது: நவாப் மாலிக் 

பித்தப்பை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாகர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 9:03 am

DIN

பித்தப்பை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாகர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
80 வயதாகும் சரத் பவாருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டு, மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி அவசர என்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னா், அவருக்கு 15 நாள்களுக்குப் பிறகு பித்தப்பையை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வது என மருத்துவா்கள் தீா்மானித்தனா். 
அதன்படி, அவா் தனியாா் மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். இந்தநிலையில் சரத் பவாருக்கு பித்தப்பை அறுவைச் சிகிச்சை இன்று வெற்றிகரமாக முடிந்தது. 
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தனது சுட்டுரையில், எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பித்தப்பை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.