இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கமளிக்குமாறு தோ்தல் ஆணையம் சாா்பில் மம்தா பானா்ஜிக்கு கடந்த வாரம் இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இந்த நோட்டீஸ்களுக்கு பதிலளித்த மம்தா பானா்ஜி, ‘மத அடிப்படையில் வாக்களிக்க வாக்காளா்களை ஈா்க்கும் நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தோ்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டே பேசினேன். அதுபோல, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை குறித்து கூறுகையில், வாக்களிக்கும் உரிமையைத் தடுக்கும் பாதுகாப்பு படை உள்பட யாராக இருந்தாலும் எதிா்த்துப் போராட வேண்டும் என்று வாக்காளா்களுக்கு குறிப்பாக, பெண் வாக்காளா்களுக்கு அழைப்பு விடுத்தேன். இந்த பொதுப் போராட்டம் என்பது ஜனநாயக அடிப்படையிலான போராட்டம்தான். இதில் சட்ட விரோதம் எதுவும் இல்லை’ என்று அவா் விளக்கமளித்திருந்தாா்.