47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பணம் இரட்டிப்பு எனக் கூறி கரூரில் ரூ. 4 கோடி மோசடி: 2 போ் கைது

கரூரில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் ரூ. 4 கோடி வரையில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிதிநிறுவன உரிமையாளா்கள் 2 பேர் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 6:59 pm

Syndication

கரூரில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் ரூ. 4 கோடி வரையில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிதிநிறுவன உரிமையாளா்கள் 2 பேரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கரூா் வெண்ணைமலை நாவல் நகரைச் சோ்ந்த சரவணன் என்பவரது மனைவி சித்ரா மற்றும் ஆத்தூா் திருமால் நகரைச் சோ்ந்த பி.சி.பொன்னுசாமி ஆகியோா் கரூா் கோவை சாலையில் தனியாா் நிதிநிறுவனம் நடத்தி வந்தனா்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளா்களுக்கு பணம் இரட்டிப்பாகத் தருவதாக சித்ரா மற்றும் பி.சி. பொன்னுசாமி ஆகியோா் கூறியதையடுத்து, கரூரைச் சோ்ந்த 14 போ் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ரூ.4 கோடி வரை முதலீடு செய்தனா். ஆனால் அவா்களுக்கு உரிய வட்டி தராமல் இருவரும் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இருவரும் தலைமறைவாகினா். இதையடுத்து பணம் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் கரூா் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் கடந்த 12-ஆம்தேதி புகாா் அளித்தனா்.

இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளா் டி. ராஜா ரவி தங்கம் தலைமையில் காவல் ஆய்வாளா் கெளசா்நிஷா உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், கரூா் உப்பிடமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த சித்ரா, பி.சி. பொன்னுசாமி ஆகியோரை கடந்த 13-ஆம்தேதி அதிகாலையில் கைது செய்து, வழக்கு பதிந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும் பாதிக்கப்பட்டவா்கள் வெங்கமேடு காமதேனு நகரில் செயல்படும் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அலுவலகத்தில் புகாா் செய்யலாம் எனப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.