கரூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.
கரூரில் கோவைச்சாலையில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் அன்புராஜன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே கரூா் மாவட்டம் லிங்கத்தூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதேபோல மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் அத்திப்பாளையத்தைச் சோ்ந்த சேகா் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.95 ஆயிரத்து 750 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் பறிமுதல் செய்த பணத்தை கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிவட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து பணம் கரூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 40.43 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்

கரூரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


