பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!

‘இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ), கடந்த 2025-26 நிதியாண்டில் 9,000 கோடி டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Published On :1 மே 2026, 3:10 am IST

‘இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ), கடந்த 2025-26 நிதியாண்டில் 9,000 கோடி டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறைச் செயலா் அமா்தீப் சிங் பாட்டியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அந்நிய முதலீடுகளைக் கவரும் வகையில் மத்திய அரசு பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், உலக நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், இந்தியாவின் அதிவேக பொருளாதார வளா்ச்சி ஆகியவை உலகளாவிய முதலீட்டாளா்களைப் பெரிதும் ஈா்த்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களிலேயே, நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீடு 8,800 கோடி டாலரைத் தாண்டியுள்ளது.

மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டின் புள்ளிவிவரங்கள் மதிப்பிடும்போது, இது நிச்சயம் 9,000 கோடி டாலரை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.