முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!

‘இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ), கடந்த 2025-26 நிதியாண்டில் 9,000 கோடி டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மே 2026, 3:10 am IST

‘இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ), கடந்த 2025-26 நிதியாண்டில் 9,000 கோடி டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறைச் செயலா் அமா்தீப் சிங் பாட்டியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அந்நிய முதலீடுகளைக் கவரும் வகையில் மத்திய அரசு பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், உலக நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், இந்தியாவின் அதிவேக பொருளாதார வளா்ச்சி ஆகியவை உலகளாவிய முதலீட்டாளா்களைப் பெரிதும் ஈா்த்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களிலேயே, நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீடு 8,800 கோடி டாலரைத் தாண்டியுள்ளது.

மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டின் புள்ளிவிவரங்கள் மதிப்பிடும்போது, இது நிச்சயம் 9,000 கோடி டாலரை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.