தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாட்னா: நோயாளி இறந்துவிட்டதாகக் கூறி வேறொருவரின் உடலை ஒப்படைத்த மருத்துவமனை

பாட்னாவில், உயிரோடு இருந்த கரோனா நோயாளி இறந்துவிட்டதாக அறிவித்து இறப்புச் சான்றிதழுடன், வேறு ஒருவரின் உடலையும் ஒப்படைத்த அரசு மருத்துவமனை பற்றிய தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
பாட்னா: நோயாளி இறந்துவிட்டதாகக் கூறி வேறொருவரின் உடலை ஒப்படைத்த மருத்துவமனை
Updated On :13 ஏப்ரல் 2021, 4:25 am

DIN

பாட்னாவில், உயிரோடு இருந்த கரோனா நோயாளி இறந்துவிட்டதாக அறிவித்து இறப்புச் சான்றிதழுடன், வேறு ஒருவரின் உடலையும் ஒப்படைத்த அரசு மருத்துவமனை பற்றிய தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி மொகம்மத்பூரைச் சேர்ந்த சுன்னு குமார் என்பவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், கரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று சின்னு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. இறுதிச் சடங்குக்காக முழுவதும் மூடப்பட்டு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மருத்துவமனை கண்காணிப்பின் கீழ் இறுதிச் சடங்குகள் நடந்தபோது, உடலை அடக்கம் செய்யும் முன் குடும்பத்தாருக்கு அவரது முகத்தைப் பார்க்க அனுமதி வழங்கப்ப்பட்ட போதுதான், அது சின்னுவின் உடல் அல்ல என்பது தெரிய வந்தது.

அப்போதுதான் சின்னு இறக்கவில்லை என்பதும், வேறொரு நபரின் உடல் சின்னுவின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தெரிய வந்தது. 

உயிரோடு இருக்கும் நோயாளி இறந்துவிட்டதாகக் கூறி, அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.