நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உ.பி. முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்டார் யோகி

உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தில் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2021, 2:40 pm


உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தில் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"எனது அலுவலகத்தில் சிலருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்."

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சிலநாள்களாக கரோனா தொற்று பாதிப்பு பெரிதளவில் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் அங்கு புதிதாக 18,021 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 95,980 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.