ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உ.பி.க்கு திரும்பும் தொழிலாளர்கள்: தயாராகும் தனிமைப்படுத்தும் முகாம்கள் 

பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வேலை தேடிச் சென்ற மாநிலங்களிலிருந்து திரும்பும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தனிமைப்படுத்த, முகாம்களை தயார் செய்யும் பணியில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியுள்ளது.

News image
உ.பி.க்கு திரும்பும் தொழிலாளர்கள்: தயாராகும் தனிமைப்படுத்தும் முகாம்கள்
Updated On :15 ஏப்ரல் 2021, 12:33 pm

DIN


லக்னௌ: பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வேலை தேடிச் சென்ற மாநிலங்களிலிருந்து திரும்பும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தனிமைப்படுத்த, முகாம்களை தயார் செய்யும் பணியில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதனால், தங்களது வாழ்விடங்களைத் தேடி உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மீண்டும் ரயிலேறி வருகிறார்கள்.

மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இதர மாநிலங்களிலிருந்து கடும் நெரிசலோடு வரும் ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்துக்குள் வந்து குவிகிறார்கள்.

ஏற்கனவே, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி  வெளி மாநிலத்திலிருந்து திரும்பிவிட்ட நிலையில், தற்போது தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரயிலில் வந்திறங்கும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, தொற்று உறுதி செய்பவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வசதியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டதைப் போன்ற முகாம்களை உருவாக்க 75 மாவட்ட நிர்வாகங்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தனிமைப்படுத்தும் முகாம்களில் தேவையான உணவுகளை சமைக்கும் சமையற்கூடங்களையும் ஏற்படுத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.