கரோனா முதல் அலையைப் போல அல்லாமல், பெரியவர்கள் மூலமாக வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
கரோனா அதிகம் பாதித்திருக்கும் நகரங்களில், குழந்தைகள் பிரிவிலும் குறிப்பிடத்தக்க அளவில் கரோனா பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
கரோனா முதல் அலையில், வயதானவர்களையே அதிகம் தாக்கிய கரோனா தொற்று, இம்முறை எந்த பேதமுமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. கொடூரமாகத் தாக்கி வருகிறது. முதல் அலையின்போது கரோனா பாதித்த குழந்தைகளுக்கு பெரிய அளவில் எந்த அறிகுறியும் ஏற்படவில்லை. ஆனால், இம்முறை குழந்தைகளுக்கும் மிக மோசமான அறிகுறிகளும், உடல் நலப் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக புணேவில் ஏராளமான குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில்லாமல் சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் காண முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா உறுதி செய்யப்படும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படுவதாகவும், சிலர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவது அவசியமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாா்: நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் செளதரி அரசு வெற்றி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


