டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

'கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கட்டணமில்லை'

கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு மாநில அரசுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் தெரிவித்துள்ளார்.

News image
கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கட்டணமில்லை
Updated On :19 ஏப்ரல் 2021, 8:00 am

DIN


புது தில்லி: கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு மாநில அரசுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் தெரிவித்துள்ளார்.

எனது அறிவிக்கு எட்டிய வகையில், கரோனா வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகளுக்கு மாநில அரசுகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுநெறிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

நாங்கள் ஆக்ஸிஜன் உருளைகளை கொள்முதல் செய்துள்ளோம். ஒரு ரயில் பெட்டிக்கு இரண்டு ஆக்ஸிஜன் உருளைகள் வழங்கப்படும், அதன்பிறகு ஆக்ஸிஜன் உருளைகளில் வாயுவை நிரப்பிக் கொள்வது, உள்ளிட்ட இதரப் பணிகளை மாநில அரசுகள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே சார்பில் இதுவரை 4,0052 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.