வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உ.பி.யில் வாகனங்கள் மீது ரயில் மோதல்: 5 பேர் பலி

உ.பி.யில் ஆளில்லா ரயில்வே சிராசிங்கை கடக்க முயன்ற வாகனங்கள் மீது ரயில் மோதியில் 5 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 11:02 am

DIN

உ.பி.யில் ஆளில்லா ரயில்வே சிராசிங்கை கடக்க முயன்ற வாகனங்கள் மீது ரயில் மோதியில் 5 பேர் பலியானார்கள். 

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பில்பூர்-மிரான்பூர் எனும் இடத்தில் ஆளில்லா ரயில்வே சிராசிங்கை பைக் மற்றும் டிரக் ஆகிய வாகனங்கள் இன்று அதிகாலை கடக்க முயன்றன. 

அப்போது அந்த வழியாக வந்த சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு வாகங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் டிரக்கில் பயனம் செய்தவர்களில் 4 பேர், பைக்கில் பயணித்த ஒருவர் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

மேலும் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு உ.பி. அரசு தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.