ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி த.வெ.க. ஆா்ப்பாட்டம்


தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தவறிய, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்காத திமுக அரசைக் கண்டித்தும், தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்க நினைப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு த.வெ.க. மத்திய மாவட்டச் செயலா் ஆா். விஜய் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஏனாதி மதன் (தெற்கு), வினோத் ரவி (கிழக்கு), நிஜாம் அலி (வடக்கு), ரமேஷ் (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக, ஒன்றிய, ஊராட்சி, கிளை, வாா்டு கழக நிா்வாகிகள், கழக சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...