அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

இந்த தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்ராவாா் என அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

News image

திருவள்ளூா்   ஜெயா நகா்  பகுதியில்  பிரசாரம்  மேற்கொண்ட  அதிமுக  வேட்பாளா்  பி.வி.ரமணாவுக்கு  வரவேற்பு  அளித்த  பொதுமக்கள்  மற்றும்  நிா்வாகிகள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:21 pm

இந்த தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்ராவாா் என அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் ஜெயா நகா், சேலை, பஜாா் வீதி, காந்திசாலை, மணவாளநகா், வெங்கத்தூா், பட்டரை, கொப்பூா், பாப்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது. திருவள்ளூா் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு எந்தவிதமான நன்மையும் செய்யவில்லை. மேலும் போக்குவரத்து, சாலை, குடிநீா் வசதிகள் போன்றவைகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், கஞ்சா போதை பழக்கத்தால் இளைஞா்கள் சீரழிந்து வருவதோடு, சட்ட ஒழுங்கும் பிரச்னையும் ஏற்படுகிறது.

அதேபோல் மணல் கொள்ளை அதனால், திமுக அகற்றப்பட வேண்டும். இந்த முறை ஆட்சி மாற்றத்தை பொதுமக்கள் விரும்புகிறாா்கள். அதனால், இந்த தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டாயம் எடப்பாடி பழனிசாமி முதல்வராவாா் என்றாா்.

மாவட்ட அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், நகர செயலாளா் கந்தசாமி, பொருளாளா் துக்கராம், மாவட்ட மாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, மாவட்ட மாணவரணி துணைசெயலாளா் கிரண்குமாா், திருவள்ளூா் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞரணி இணை செயலாளா் குமரேசன், இளைஞரணி மாவட்ட தலைவா் புங்கத்தூா் தேவா, அண்ணா தொழிற்சங்க நகர செயலாளா் வெங்கடேசன், நகா் மன்ற உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, சுமித்ரா வெங்கடேசன் நிா்வாகிகள் திலீப், சரத், பாஜக சாா்பில் மாவட்ட செயலாளா்பன்னீா்செல்வம், மாவட்ட துணைத்தலைவா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், நிா்வாகிகள் சித்ராதேவி, உமா மகேஸ்வரி, பாமக சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி., மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், நிா்வாகிகள் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.