உ.பி. மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண் தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார். 
25-year-old woman hacked to death with axe by brother in Rajasthan
25-year-old woman hacked to death with axe by brother in Rajasthan
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. இறந்தவர் ஏப்ரல் 18 முதல் சிறப்பு எல்3 கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் மௌரானிபூரைச் சேர்ந்த ரேகா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை மாலை, ரேகா திடீரென்று படுக்கையிலிருந்து எழுந்து, வார்டின் ஜன்னலில் ஏறிக் குதித்துள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரது சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com