டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நிஜ ஹீரோ மயூர் ஷெல்கேவுக்கு மேலும் ஒரு கௌரவம்

ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு ஜாவா ஹீரோ வாகனம் வழங்கி அந்நிறுவனம் கௌரவித்துள்ளது.

News image
நிஜ ஹீரோ மயூர் ஷெல்கேவுக்கு மேலும் ஒரு கௌரவம்
Updated On :24 ஏப்ரல் 2021, 9:39 am

DIN

ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு ஜாவா ஹீரோ வாகனம் வழங்கி அந்நிறுவனம் கௌரவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மண்டலத்துக்குள்பட்ட வாங்கனி ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம், நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தக் காட்சி, அந்த நடைமேடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அதனை ரயில்வேயின் சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டு பலராலும் மீள்பகிர்வு செய்யப்பட்டது.

அதாவது, தனது கண் பார்வையற்ற தாயுடன் சிறுவன் ஒருவன் நடைமேடையில் நடந்துச் சென்று கொண்டிருக்கிறான். அப்போது துரதிருஷ்டவசமாக நடைமேடையின் ஓரத்தில் நடந்துச் சென்ற சிறுவன், திடீரென கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட, அப்போது மிக வேகத்தில் அதே தண்டவாளத்தில் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே, ஒரு நொடி கூட தாமதிக்காமல், தன்னுயிரை பணயம் வைத்து ஓடிச் சென்று அந்த சிறுவனை நடைமேடையில் இருந்த தாயிடம் தூக்கிவிட்டு, ரயில் அவ்விடத்தைக் கடந்து செல்ல ஒரு சில நொடிகளே இருந்த நிலையில் தானும் நடைமேடை மீது ஏறி, தன்னையும் தற்காத்துக் கொண்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தார்.

மிக மோசமான நேரத்தில் சாமர்த்தியமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவின் தீரத்தை பலரும் பாராட்டினர். 

ரயில்வே, அவரது தீரத்தைப் பாராட்டி அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கியது. ஆனால், அவர் ஒரு நிஜ ஹீரோ என்பதால், தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையில் பாதியை தான் காப்பாற்றிய சிறுவனின் கல்விக் செலவுக்காகக் கொடுப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில்தான், அவருக்கு ஜாவா ஹீரோ இருசக்கர வாகனத்தை அந்த நிறுவனம் வழங்கி மேலும் அவரை கௌரவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.