மாதவிடாய் காலங்களிலும் கரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளலாம் என்று நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்னையும் ஏற்படவாய்ப்பில்லை. மாதவிடாயை காரணமாகக் கூறி தடுப்பூசி போட்டுக்கொள்வதை தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.