திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனாவுக்குப் புதிய மருத்துவமனை: கேஜரிவால் நேரில் ஆய்வு

தில்லி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கட்டப்பட்டு வரும் புதிய கரோனா சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 6:56 am

DIN


தில்லி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கட்டப்பட்டு வரும் புதிய கரோனா சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆய்வு மேற்கொண்டார்.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடன் நேரில் வந்து கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்.

தலைநகரான தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவிலும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால், பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தில்லி ஜிடிபி மருத்துவமனை அருகே கரோனா சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணிகளை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஏப்.27) ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.