புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவித்து வருகின்றது.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ளது.
மே 3-ஆம் தேதி வரை மதியம் 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...