தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊரடங்கிற்கு ஒத்துழையுங்கள்!: மக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்படவுள்ள 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வேண்டுகோள்

News image

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)

Updated On :28 ஏப்ரல் 2021, 7:27 am

DIN

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்படவுள்ள 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் நாளை (ஏப்.29) மாலை முதல் 2 வாரங்களுக்கு  முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படவுள்ளது. எனினும் காலை 6 முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருள்களுக்கு அனுமதி வழங்கப்படும். 10 மணிக்குப் பிறகு அனைத்து கடைகளும் மூடப்படும். பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்து முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசியதாவது, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் கரோனா தொற்றி பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.